உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாணவர்கள், ஆசிரியர்கள் மீது சரமாரி தாக்குதல்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் கடலோர ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியரை தெலுங்கானா பகுதி மாணவர்கள் ஓட ஓட விரட்டித் தாக்கினர்.
புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தான் கடலோர ஆந்திராவில் குறிப்பிட்ட சில இடங்களில் செயல்பட்டு வரும் கல்லூரிகளின் விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது.
கடலோர ஆந்திரா, ராயசீமா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து தேர்வில் தோல்வி அடைந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறும்போது உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி பல்கலைக்கழத்திற்கு வந்த மாணவர்களை அங்கு திரண்டிருந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் தெலுங்கானாவைச் சேர்ந்த கல்வியாளர் சுப்பராமையாவும் தாக்கப்பட்டார்.
உஸ்மானியா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்கள் அத்துமீறி நடப்பதாக அவர் புகார் கூறியுள்ளார்.
கல்வி நிலையத்தில் மாணவர்களும், பேராசிரியரும் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.