தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது ரொம்ப ரொம்ப ஈசி-பிரணாப் பேச்சு
கோவை: தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பது மிக மிக எளிது என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
கோவையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தின்போதுதான் இப்படிப் பேசினார் பிரணாப்.
பிரணாப் முகர்ஜி பேசுகையில்,
இந்தியாவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என கேட்கிறார்கள். இந்தியாவில் வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக் கடனை கொடுத்திருக்கிறோம். இந்தியாவை அடுத்தக் கட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளோம். இதுதான் இந்தியாவின் வளர்ச்சி.
4 கோடி விவசாயிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ப.சிதம்பரத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயிகளின் நிலை உயர்த்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி உறுதிமொழி ஒன்றை கொடுத்திருந்தார். அது ஏழைகளுக்கு எப்போதும் உதவ வேண்டும் என்பதையே மக்களுக்கு உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளச் செய்தார். அதைத்தான் நம் காங்கிரசும் செய்துக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் 40 வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் போய்விட்டது. காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி செய்கிற நிலை வரவேண்டும். அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சியினர் பலம் கொண்டு முன்னெடுக்க வேண்டும்.
ஆட்சியில் தற்போது இல்லையென்றாலும், மக்கள் சேவையில் நாம் எப்போதும் ஈடுபட்டுக்கொண்டிருந்தால், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வருவது மிக மிக எளிதான விஷயம் என்று பேசினார் பிரணாப் முகர்ஜி.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications