விரைவில் வருகிறது விர்சுவல் வேலைவாய்ப்பு அலுவலகம்: இனி கியூ வேண்டாம்
சென்னை: விரைவில் விர்ச்சுவல் வேலைவாய்ப்பகம் வரப் போகிறது. எனவே கியூ வரிசையில் நிற்கும் தொல்லை இனி இருக்கப் போவதில்லை.
சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1998-ம் ஆண்டு ஆனந்த் செல்வன் என்பவர் பதிவு செய்தார். இன்னும் அவருக்கு வேலை கிடைத்தபாடில்லை. கடந்த 12 ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தனது சொந்த ஊரான திருச்சியில் இருந்து சென்னைக்கு 5 முறை சென்றுள்ளார்.
இது போன்ற கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிலாளர் துறை விர்சுவல் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த இணையதள வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கியதும் இனி பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலங்களுக்கு முன் கால் கடுக்க நிற்கத் தேவையில்லை. ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து சமர்பித்தால் போதும்.
இது குறித்து எல்காட் தலைவர் சந்தோஷ் பாபு கூறியதாவது,
பதிவு செய்ய விரும்புவோர் எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் பதிவு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடிவுகள் வந்தவுடன் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் முன் மாணவர்கள் நீண்ட வரிசையில் நிற்பது வழக்கம். ஆனால் இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை.
ஏற்கனவே விண்ணப்பித்துள்ள சுமார் 60 லட்சம் பேரின் விவரங்கள் கணிணியில் பதிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டம் வாரியாக வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் பற்றிய தகவல் தொகுப்பு உருவாக்கப்படும்.
இந்த தளத்தில் பயன்படுத்தப்படும் 2 விண்ணப்ப சாப்ட்வேர்களில் ஒன்று பதிவு செய்த தனியார் கம்பெனிகளுக்கு இந்த தகவல் தொகுப்பை பார்க்க அனுமதி அளிக்கும். இந்த தளத்தில் தகுதியான எலக்ட்ரிஷியனோ அல்லது தச்சரோ விண்ணப்பிக்கக்கூடும். அனைத்து தகவல்களும் பின் கோடு மூலம் ஒழுங்குபடுத்துவதால் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்வது சுலபம்.
இதன் மூலம் மக்கள் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குப் போக வேண்டாம், வேலையே அவர்களைத் தேடி வரும். இது வரை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறவனங்களுக்கு மட்டும் தான் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலைமை இனி மாறவுள்ளது என்று அவர் கூறினார்.
அனைத்து தகவல்களும் மாநிலத் தகவல் மையத்தில் வைக்கப்படும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்தார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications