சென்னையில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம்: புறப்படும்போதே சிறைவைப்பு
நெல்லை: சென்னையில் நடக்கும் முற்றுகை போராட்டத்திற்குச் செல்ல முயன்ற சத்துணவுப் பணியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சென்னையில் இன்று அங்கன்வாடி சத்துணவுப் பணியாளர்கள் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தினை தடுத்து நிறுத்தும் விதமாக தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாய் மொழியாக உத்தரவு வந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று தனிப்பிரிவு போலீசார், உளவுத்துறை போலீசார் மற்றும் போலீசார் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் முகாமிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு பணியாளர்கள் போராட்டத்திற்கு சென்னை செல்கிறார்களா என்று கண்காணித்தனர்.
மேலும் சென்னை செல்வோரை பிடித்து இரவு முழுவதும் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், வீடுகள், சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்து காலை 8 மணி வரை காவல் இருந்தனர். அதில் ஆண்களும், பெண்களும் அடக்கம். பின்னர் அவர்கள் அனைவரையும் உரியவரிடமிருந்து உரிய உத்தரவு வந்தபின் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications