தூத்துக்குடி ஸ்பிக் ஆலையில் மீண்டும் உர உற்பத்தி தொடக்கம்

இது குறித்து தூத்துக்குடியி்ல் ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி. முத்தையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஸ்பிக் தொழிற்சாலையில் உர உற்பத்தி தடைபட்டிருந்தது. இதனால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர்.
இதையடுத்து இந்த ஆலையை மீண்டும் இயக்க மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி நடவடிக்கை எடுத்தார். ஆலையில் உள்ள முக்கியமான ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் உர உற்பத்தி துவங்குவதில் 3 மாதம் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது எஸ்.எஸ்.பி. எனப்படும் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உர உற்பத்தி நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் டி.ஏ.பி. யூரியா ஆகிய உரங்களின் உற்பத்தி வரும் செப்டம்பர் மாதம் 3-வது வாரம் முதல் துவங்கும். இதனை மத்திய ரசாயானம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி துவங்கி வைக்கிறார்.
வரும் அக்டோபர் மாதம் முதல் உர உற்பத்தி முழு வீச்சில் துவங்கும். இதில் டி.ஏ.பி. உரம் ஆண்டுக்கு 4.5 லட்சம் டன்னும், என்.பி.கே. உரம் ஆண்டுக்கு 1.5 லட்சம் டன்னும், யூரியா 6.5 லட்சம் டன்னும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சார்பில் 1000 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications