For Daily Alerts
Just In
போலீசாரை மிரட்டிய மனித உரிமை அமைப்பு: மனித உரிமை ஆணையம் விசாரணை
நெல்லை: மனித உரிமை அமைப்பினர் போலீசாரை மிரட்டிய வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தினர் நெல்லையில் விசாரணை நடத்தவுள்ளனர்.
வீரவநல்லூர் மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசாரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் கண்காணிப்பகம் சார்பில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த குழுவை சேர்ந்த டிஎஸ்பி சச்சின், இன்ஸ்பெக்டர் ரவிசிங் உள்ளிட்ட 4 பேர் நெல்லை வந்தனர். இங்கு 3 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்துகின்றனர். வீரவநல்லூர் போலீசார் மற்றும் மக்கள் கண்காணிப்பக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.
Comments
மனித உரிமை ஆணையம் நெல்லை விசாரணை போலீசார் மிரட்டல் வழக்கு human rights commission tirunelveli investigation police threat
Story first published: Tuesday, August 31, 2010, 18:00 [IST]