Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷார்ஜாவில் தவிக்கும் 800 இந்தியர்கள்: வேலையின்றி பட்டினியால் வாட்டம்

Subscribe to Oneindia Tamil

Sharjah
ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் ஒரு பொறியியல் கம்பெனியில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியமே தரவில்லை என்றும், இதனால் அந்த கம்பெனியின் தொழிலாளர் முகாம்களில் வசிக்கும் 800 இந்திய தொழிலாளர்கள் உணவின்றித் தவிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நகரசபைக்கு உரிய வரியைக் கட்டாததால், தொழிலாளர் முகாம்களில் உள்ள குடிதண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

மேலும், கழிவுநீர் குழாய் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளும் அகற்றப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றது.

ரியல் எஸ்டேட் துறை, பொருளாதார சரிவால் நலிவடைந்துள்ளது. கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்கள் பலர் நாட்டை விட்டே ஓட்டம் பிடித்துவிட்டனர். இவற்றால் அன்றாட உணவிற்கு போராடும் தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த 800 இந்தியத் தொழிலாளர்களுக்கும் சம்பளம் தரப்படாமல் உள்ளதால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+