சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலி!

இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பன்றிக் காய்ச்சல் பரவியது. மகாராஷ்டிரத்தில் இந்த நோய்க்கு 767 பேர் பலியாயினர். குஜராத்தில் 346 பேரும், கர்நாடகத்தில் 225 பேரும் உயிரிழந்தனர். டெல்லி, கேரளாவில் தலா 118 பேரும், ஆந்திராவில் 85 பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
பின்னர் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட இந்த நோய் இப்போது மீண்டும் பரவி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தி்ல் பன்றிக் காய்ச்சலால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆகஸ்டு 11ம் தேதி நந்தனம் அப்பல்லோ மருத்துவமனையில் கடலூரைச் சேர்ந்த ஹேமலதா என்பவரும், 25ம் தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெய்னபுன் சகரியா ஆகியோரும் பன்றிக் காய்ச்சால் இறந்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராயபுரம் ரெய்னி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அன்னபூர்ணா (32) என்ற பெண்ணும் 29ம் தேதி இறந்தார்.
இந்த 3 பெண்களின் ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதிக்கப்பட்டதில் பன்றி காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications