கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தும் ராஜபக்சே அரசு-தமிழர்களைப் பிரிக்க அடுத்த சூழ்ச்சி
கொழும்பு: தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்துகிறது ராஜபக்சே அரசு.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் உலக வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து ராஜபக்சே அரசின் மதிப்பு குறைந்துவிட்டது. உலக நாடுகள் பல நெருக்கடிகளைத் தந்து கொண்டிருக்கின்றன.
போர்க்குற்றத்தை விசாரிக்க ஐ.நா ஒரு குழுவை நியமித்தது. ஆனால் அவர்களை நாட்டுக்குளேயே வர இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இது தவிர்த்து ஐரோப்பிய நாடுகள் தாங்கள் அளித்து வந்த சலுகைகளை நிறுத்திக் கொண்டன.
உலகின் பார்வை தன் மீது இருந்தாலும் சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறைக்க இலங்கை அரசு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்தியா, சீனா ஆகிய நாடுகளை உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
முதலில் இலங்கை அரசு இந்திய திரைப்பட விழாவை நடத்தியது. ஈழத் தமிழர்கள் உணர்வுகளை மதிப்பதாகக் கூறி திரையுலக ஜாம்பவான்கள் யாரும் செல்லாததால் அது தோல்வி அடைந்தது.
பின்னர் ஆசினை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடிப் பார்த்தார் ராஜபக்சே. இதில் சினிமாக்காரர்கள் மத்தியில் லேசான தடுமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது அவரால்.
தற்போது தலைநகர் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. வரும் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5,6,7,8 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த மாநாட்டை நடத்தி தமிழர்களின் மீது தங்களுக்குள்ள மதிப்பையும், மரியாதையையும் உலகிற்கு பரைசாற்றி குற்றத்தை மறைக்க நினைக்கிறது.
இத்திட்டத்தை சொல்லவில்லை என்றாலும் புரிந்து கொண்ட உலகத் தமிழ் எழுத்தாளர்கள் இம்மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த மாநாட்டுக்காக கடும் முயற்சி எடுத்து வரும் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications