கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தும் ராஜபக்சே அரசு-தமிழர்களைப் பிரிக்க அடுத்த சூழ்ச்சி
கொழும்பு: தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்துகிறது ராஜபக்சே அரசு.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் உலக வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து ராஜபக்சே அரசின் மதிப்பு குறைந்துவிட்டது. உலக நாடுகள் பல நெருக்கடிகளைத் தந்து கொண்டிருக்கின்றன.
போர்க்குற்றத்தை விசாரிக்க ஐ.நா ஒரு குழுவை நியமித்தது. ஆனால் அவர்களை நாட்டுக்குளேயே வர இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இது தவிர்த்து ஐரோப்பிய நாடுகள் தாங்கள் அளித்து வந்த சலுகைகளை நிறுத்திக் கொண்டன.
உலகின் பார்வை தன் மீது இருந்தாலும் சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறைக்க இலங்கை அரசு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்தியா, சீனா ஆகிய நாடுகளை உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
முதலில் இலங்கை அரசு இந்திய திரைப்பட விழாவை நடத்தியது. ஈழத் தமிழர்கள் உணர்வுகளை மதிப்பதாகக் கூறி திரையுலக ஜாம்பவான்கள் யாரும் செல்லாததால் அது தோல்வி அடைந்தது.
பின்னர் ஆசினை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடிப் பார்த்தார் ராஜபக்சே. இதில் சினிமாக்காரர்கள் மத்தியில் லேசான தடுமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது அவரால்.
தற்போது தலைநகர் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. வரும் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5,6,7,8 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த மாநாட்டை நடத்தி தமிழர்களின் மீது தங்களுக்குள்ள மதிப்பையும், மரியாதையையும் உலகிற்கு பரைசாற்றி குற்றத்தை மறைக்க நினைக்கிறது.
இத்திட்டத்தை சொல்லவில்லை என்றாலும் புரிந்து கொண்ட உலகத் தமிழ் எழுத்தாளர்கள் இம்மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த மாநாட்டுக்காக கடும் முயற்சி எடுத்து வரும் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications