வெளிநாடு செல்ல முயன்ற 54 இலங்கைத் தமிழர்கள் குற்றாலத்தில் கைது
நெல்லை: இலங்கையிலிருந்து கேரளா வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 54 இலங்கைத் தமிழர்கள் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் போர் முடிவடைந்ததை தொடர்ந்து அங்குள்ள தமிழர்கள் வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில் கேரளாவுக்கு வந்த இலங்கை தமிழர்களை கேரள கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்ததும், அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முற்பட்டோரை கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தேவர் லாட்ஜ் மற்றும் சிவானந்தா லாட்ஜில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். 54 பேரும் சென்னையில் இருந்து பேருந்தில் குற்றாலத்திற்கு வந்ததாகவும், இங்கிருந்து கேரளா வழியாக வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் முறையான அனுமதியோடு வந்தார்களா, அல்லது தமிழக முகாம்களில் இருந்து வந்தார்களா, என்பது தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கர்க் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இவர்களை சென்னையிலிருந்து அழைத்து வந்த பேருந்து மீண்டும் சென்னை திரும்பி விட்டதால் ஆள் கடத்தல் சந்தேகம் போலீஸாருக்கு வலுத்துள்ளது. குற்றாலம் போலீஸாருடன், கியூ பிரிவு போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications