அடுத்த 3 சீசனுக்கு 74 போட்டிகளை நடத்த ஐபிஎல் முடிவு
மும்பை: அடுத்த மூன்று சீசன்களுக்கு, ஒவ்வொரு தொடரிலும் 74 போட்டிகளை நடத்த ஐபிஎல் முடிவு செய்துள்ளது.
இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் நடத்தி வரும் டுவென்டி 20 சாம்பியன் தொடரில் தற்போது 60 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதை தற்போது 74 போட்டிகளாக ஐபிஎல் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
இது அடுத்த ஆண்டு முதல் 3 சீசன்களுக்கு நடைமுறையில் இருக்குமாம். சஹாரா புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி அணிகள் புதிதாக சேர்ந்திருப்பதைத் தொடர்ந்து போட்டிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
அதன்படி மொத்தம் 70 சுற்றுப் போட்டிகள் நடைபெறும். இதுதவிர அரை இறுதிப் போட்டிகள் 2, மூன்றாவது இடத்துக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை சேர்ந்து மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும்.
இன்று நடந்த ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இத்தகவலை கிரிக்கெட் வாரிய செயலாளர் என்.சீனிவாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications