விதிமுறையை மீறும் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு 3 மணி நேரம் டிராபிக் போலீஸ் பணி
காஞ்சிபுரம்: கூடுதலாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு காஞ்சிபுரம் போலீஸார் நூதன தண்டனை தருகின்றனர். அவர்களை 3 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தச் சொல்கின்றனர்.
ஆட்களை மூச்சு முட்டும் அளவிற்கு ஏற்றி செல்வது தான் ஷேர் ஆட்டோக்கள். இவ்வாறு பயணிகளை பொட்டலங்கள் போல அடைத்துக் கொண்டு செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை எவ்வவாறு தடுப்பது என்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்வு காணுமாறு காஞ்சீபுரம் போலீஸ் எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். என்ன தான் அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்றும் ஷேர் ஆட்டோக்களை பிடித்து தண்டித்தாலும் மீண்டும் தங்கள் வேலையைத் தான் காட்டுகிறார்கள். எனமே, நாமும் சற்று வித்தியாசமாக யோசித்துத் தான் தண்டனை வழங்க வேண்டும் என்று அதில் முடிவு செய்தனர்.
காஞ்சீபுரம் நகரின் பல பகுதிகளில் இனி பிடிக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்வதைத் தவிர்த்து ஆட்டோ ஓட்டுநர்கள் 3 மணி நேரம் நடுரோட்டில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தினர். அதன்படி அளவிற்கு மீறி ஆட்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோக்களை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி பிடித்தார்.
அந்த ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசாரின் மேலாடையைக் கொடுத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிட்டார். தன் சக ஆட்டோ ஓட்டுநர்கள் பட்டபாடைக் கண்கூடாகப் பார்த்த மற்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த புதிய தண்டனையை ஏற்றுக் கொள்வதை விட விதிமுறையை பின்பற்றுவது நல்லது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் குறைந்துள்ளது என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து மற்ற வாகன ஓட்டிகள் கூறியதாவது,
முன்பெல்லாம் ஷேர் ஆட்டோக்கள் விதிமுறையின்றி அவர்கள் இஷ்டம் போல் ஓட்டினார்கள். தற்போது அந்த தொல்லையின்றி நாங்கள் நிம்மதியாகச் செல்கிறோம். இந்த வித்தியாசமான தண்டனையை சென்னையிலும் கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications