அரசியல் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது கண்டனத்துக்குரியது-இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

EVKS Elangovan
திருச்செங்கோடு: அரசியல் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் வன்முறை தலை தூக்கியுள்ளது. அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது.

என்னுடைய வீடு பெட்ரோல் குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளது. மிரட்டல் என்பது அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் வருகிறது. தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு மிரட்டல்கள் விடுப்பது கண்டனத்துக்கு உரியது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசு திட்டங்கள் என தமிழக அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் தமிழகத்தில், குறிப்பாக ஆந்திர - தமிழ்நாடு எல்லையோரத்தில் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள். அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+