பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம்-காந்தி பேரன்

ராஜ்மோகன் காந்தி இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் தெற்கு ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் பாடப்பிரிவு விரிவுரையாளராக உள்ளார்.
ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரத் தூதர் அப்துல்லா ஹூசைனை ராஜ்மோகன் காந்தி சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இரு நாடுகளிடையே இப்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழலை அரசியல் ஆதாயமாக்கிக் கொள்ள வேண்டும். கடந்த கால நிகழ்வுகளை இருதரப்பினரும் மறந்துவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்க முன்வரவேண்டும்.
பெருவெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் இந்தியா முதல் கட்டமாக 50 லட்சம் டாலர் (ரூ. 23 கோடி) அளிப்பதாக உறுதியளித்தது. பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கூடுதலாக 20 லட்சம் டாலர் (ரூ. 92 கோடி) அளிப்பதாக இந்தியா அறிவித்தது. உதவித் தொகை முழுவதும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படுகிறது. இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அளிக்க முன்வந்துள்ள உதவியை ஏற்கும் அதேநேரத்தில் பழைய விவகாரங்களை மறந்து பேச்சு நடத்தவேண்டும் என்று அவர் கூறினார். இந்த சந்தர்ப்பத்தை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானில் சமீபத்தில் பெய்த மழையில் நாட்டின் மொத்த பரப்பளவில் ஐந்தில் ஒரு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 1,400 பேர் உயிரிழந்தனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரு வெள்ளத்தை சமாளிக்க ஐக்கிய நாடுகள் சபை 46 கோடி டாலர் தேவைப்படும் என அறிவித்தது. உடனடியாக பல்வேறு நாடுகள் அளித்த நிதி 29 கோடி டாலரை எட்டியது.
இப்போது ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக அங்கு மறுவாழ்வுப் பணிகள் தொடங்கி, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப வெகு நாள்களாகும். கட்டமமைப்பு வசதிகளை ஏற்படுத்த பல ஆண்டுகள் ஆகும். பாகிஸ்தனுக்கு இந்தியா மேலும் உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உதவி செய்யும் அதே நேரத்தில் பேச்சுவார்தையையும் நடத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் பலன் ஏற்படும் என்றார் ராஜ்மோகன் காந்தி.












Click it and Unblock the Notifications