அன்னை தெரசாவின் சேவையை கௌரவித்து தபால்தலை வெளியிட்ட அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கிட்டத்தட்ட 50 வருடங்களாக ஏழை, எளிய மக்களுக்கு அன்னை தெரசா ஆற்றிய சேவையை பாராட்டி அவரை கௌரவிக்கும் வகையில் அமெரிக்கா தபால் தலை வெளியிட்டுள்ளது.

இந்த சிறப்புத் தபால் தலையை அமெரிக்க தபால் சேவைத் துறை நேற்று தலைநகர் வாஷிங்டனில் வெளியிட்டது.

44 சென்ட் மதிப்புள்ள இதில் 1979-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் படம் உள்ளது. இந்த படத்தை கொலரடோ ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த விருது பெற்ற ஓவியர் இரண்டாம் தாமஸ் பிளாக்ஷீர் வரைந்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பிளாக்ஷீரும் கலந்து கொண்டார்.

அன்னை தெரசா 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கொல்கத்தாவில் இறந்தார். அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு தான் அவருக்கு கௌரவ அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது.

சுமார் 50 ஆண்டு காலம் இந்தியாவில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் அயராது சேவை புரிந்தவர் அன்னை தெரசா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+