குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஆசாமி-கலெக்டருக்கு லஞ்சம் கொடுத்து ஷாக்!
ராசிபுரம்: குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர், உரிய லைசென்ஸ் எதுவும் இல்லாமல் சிக்கிக் கொண்டார். அப்போது அதிலிருந்து தப்ப அங்கு நின்றிருந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து இதை லஞ்சமாக வைத்துக் கொண்டு ஆளை விடுங்கள் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உ. சகாயம். தமிழகத்திலேயே முதல் முறையாக சொத்துக் கணக்கை பகிரங்கமாக வெளியிட்ட முதல் ஐஏஎஸ் அதிகாரி. மிகவும் நேர்மையானவர் என மக்களால் பாராட்டப்படுபவர். மிக மிக எளிமையானவர்.
இவர் ராசிபுரம் அருகிலுள்ள மசக்காளிப்பட்டியில் உள்ள மகளிர் கல்லூரி ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்க, அரசு வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். வாகனம் தேசிய நெடுஞ்சாலை- நான்குவழிச் சாலையில் பொம்மக்குட்டை மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், குடிபோதையில் தட்டுத் தடுமாறியபடி குறுக்கே வந்துள்ளனர். சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தினார், கலெக்டரின் ஒட்டுநர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் குடிபோதையில் இருந்த இரு சக்கர வாகனஓட்டியை அழைத்து அறிவுரை கூறிய ஆட்சியர், ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்று சோதனை நடத்தினார். அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால், மோட்டார் வாகன ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனால், பதறிப்போன இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த குடிமகன், தனது பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாயை எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்து, தன்னை விட்டும்விடும்படி கேட்டுள்ளார்.
இதைப் பார்த்த கலெக்டருக்கு கடும் கோபம் வந்து விட்டது. காரிலிருந்து இறங்கிய அவர் பைக் சாவியை எடுத்துக் கொண்டு, வண்டியை ஓரமாக நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளரை உடனடியாக வருமாறு கூறி அவரிடம் வண்டியையும், சாவியையும் ஒப்படைத்து விட்டுக் கிளம்பினார்.
பின்னர் கல்லூரி விழாவுக்கு தாமதமாக சென்றார். அங்கு போய் முதல் வேலையாக இந்த சம்பவத்தைக் கூறி வேதனைப்பட்டார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications