கேரளாவில் ஆசிரியர்களை கண்டித்து பிரம்புகள் உடைக்கும் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவ, மாணவிகளை அடிக்கும் ஆசிரியர்களை கண்டித்து பிரம்புகளை உடைக்கும் நூதனப் போராட்டம் நடந்தது.
கேரளாவில் பள்ளி மாணவ, மாணவிகளை ஆச்ரியர்கள் பிரம்பால் அடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெற்றோர் தலைமைச் செயலகம் முன் திரண்டனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளை உடைத்து கோஷம் எழுப்பினர்.
இனிமேல் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்கும் ஆசிரியர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications