கரூரில் போலீஸ் அதிகாரி மகள் உள்பட 2 மாணவிகள் பள்ளியிலிருந்து கடத்த முயற்சி

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் தனியார் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகளை பள்ளி வாளாகத்தில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் புகழ் பெற்ற பள்ளியான பரணி பார்க் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8 ம் வகுப்பு டி கிளாஸ்-ல் படிக்கும் மாணவி சிந்து, அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவி அகன்யா ஆகியோர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல பள்ளி வாகத்திற்காக காத்திருந்தனர்.

அப்போது, அங்கு காரில் வந்த ஒரு கும்பல் பள்ளி மாணவிகளை நைசாக பேசி காரில் ஏற்றுச் சென்றுள்ளது. காரில் கடத்தப்படுவதை அறிந்த குழந்தைகள் சத்தம் போடவே அந்த கும்பல் மாணவிகளை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளது.

இதனையடுத்து, அந்த வழியே வந்தவர்களிடம் விஷயத்தை கூறி தங்களது பெற்றோர்களுக்கு செல் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

இதை அறிந்து பதறித்துடித்த பெற்றோர்கள் கரூர் - சேலம் பைபாஸ்-ல் குழந்தைகள் இருப்பதை அறிந்து அங்கு சென்று மீட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிச் செல்ல பள்ளி வாகனம் வந்த போது ஆண்டாங்கோவில் அருகே அந்த வேனை பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் மறித்து சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் மாணவி அகன்யாவின் தந்தை போலீஸ் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+