ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு கோரி பிரதமரிடம் அதிமுக முறையீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து அதிமுக எம்.பிக்கள் குழு முறையிட்டது.
அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து அதிமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் தம்பித்துரை கூறுகையில்,
அ.தி.மு.க. எம்.பி.க்களின் கோரிக்கையை மிகவும் கவனமாக கேட்ட பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக கூறினார் என்றார்.
இதேபோல உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து அதிமுக குழு மனு அளித்தது.












Click it and Unblock the Notifications