ஆஸ்திரேலியாவில் மைனாரிட்டி அரசை அமைக்கும் ஜூலியா கிலார்ட்

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில்நடந்த தேர்தலில் ஜூலியா தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதேபோல எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
3 சுயேச்சைகள் கையில் யார் அடுத்த ஆட்சியை அமைப்பது என்ற நிலை உருவானது. இதையடுத்து இந்திய பாணியில் சுயேச்சைகளை வளைத்துப் பிடிக்க ஜூலியா தலைமையிலான கட்சியும், டோனி அப்பாட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியும் களம் இறங்கின. இதில் ஜூலியாவுக்கு வெற்றி கிடைத்தது.
ஜூலியாவுக்கு ஆதரவாக டோனி வின்ட்சர், ராப் ஓக் ஷாட் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். மூன்றாவது சுயேச்சையான பாப் காட்டர் அப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து ஜூலியா கட்சிக்கு 76 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்தது. எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 74 எம்.பிக்களே உள்ளனர். இதன் மூலம் சிறுபான்மை அரசை அமைக்கவுள்ளார் ஜூலியா கிலார்ட்.
1940ம் ஆண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக சிறுபான்மை பலத்துடன் ஆட்சி அமைவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை ஜூலியாவுக்கு உண்டு. தற்போது 2வது முறையாக அவர் பிரதமராக தொடரவுள்ளார்.












Click it and Unblock the Notifications