போலிப் பூச்சி மருந்துகளால் விவசாயிகள் அதிர்ச்சி-தொழிற்சாலை உரிமையாளர் எஸ்கேப்
கோபி: மும்பையில் உள்ள பிரபல பூச்சி மருந்து நிறுவனத்தின் பெயரில் போலிப் பூச்சி மருந்துகள் கோபிச் செட்டிப்பாளையத்தில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல பூச்சி மருந்து நிறுவனத்தின் பெயரில் போலிப் பூச்சி மருந்துகளை கோபிச் செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்து வந்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள பூச்சி மருந்துகள் ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுள்ளது.
தகவல் அறிந்த போலீசார் மாறுவேடத்தில் சென்று போலிப் பூச்சி மருந்து தொழிற்சாலையைச் சேர்ந்த 3 பேரை கையும் களவுமாகப் பிடித்தனர். ஆனால் தொழிற்சாலை உரிமையாளர் சிவக்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications