திருவண்ணாமலை அருகே பஸ்- லாரி நேருக்கு மோதல்-9 பேர் கருகி பலி
திருவண்ணாமலை: திருண்ணாமலை அருகே அரசு பஸ்சும் - லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் தீயில் கருகி பலியானார்கள்.
வேலூரிலிருந்து கடலூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து திருவண்ணாமலை அருகே மல்லவாடியை நோக்கி சென்ற போது, எதிரே வந்த லாரி நேராக பேருந்து மீது மோதியது. இதில் பயணிகள் அமரந்திருந்த சீட்களை உடைத்துக் கொண்டு லாரி சீறிப் பாய்ந்து சென்றது.
மேலம், இந்த விபத்தின் போது, பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து. இதில் பேருந்து மற்றும் லாரியும் தீயில் கருகியது. இந்த விபத்தில் பேருந்து முன் பகுதியில் அமர்ந்திருந்த 9 பேர் உட்கார்ந்த நிலையில் எரிந்து உருத் தெரியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்ததை அறிந்து அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் ஓடி வந்து பேருந்தில் இருந்த மற்றவர்களை காப்பற்றினர். பேருந்தில் பயணம் செய்த 25 -க்கும் மேற்பட்டவர்கள் தீ காயத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்களும், போலீசாரும் ச்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications