தூத்துக்குடியில் 2012-ம் ஆண்டு முதல் 7 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி

தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் மணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜாசங்கரலிங்கம், துணை தலைவர்கள் மனோகரன், ஜோபிரகாஷ், தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த் பாரத் தனியார் மின் உற்பத்தி நிலைய துணைத் தலைவர் வேல் மயில் பேசுகையில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் மெகா மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தருவைகுளம் அருகே மேலமருதூரில் நிலக்கரி மற்றும் எண்ணெய் குழுமம் சார்பில் கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து வருகிறது. மேலும் இந்த் பாரத் நிறுவனம் சார்பில் விறகு மூலம் 300 மெகா வாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
இது தவிர கே.வேலாயுதபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் 450 மெகா வாட் திறனுடைய புதிய மின் நிலையத்தில் விரைவில் உற்பத்தி துவங்கும். இந்த புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 2012-ம் ஆண்டு மொத்தம் 7 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி கேந்திரமாக மாறும் என்றார்.












Click it and Unblock the Notifications