அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும் கோவை ஐடி பூங்கா: வாடகை ரூ.5 குறைப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்: கோவை தகவல் தொழிலநுட்ப பூங்காவை கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த பூங்கா அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு முன் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சில நிறுவனங்கள் இந்த பூங்காவில் தங்கள் அலுவலகங்களை அமைக்க முன்பதிவு செய்துள்ளன. மேலும், இரண்டு பெரிய நிறுவனங்களும் இங்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு ஒரு சதுர அடிக்கு அரசு ரூ. 30 நிர்ணயித்திருந்தது. தற்போது அதை சதுர அடிக்கு ரூ. 5 குறைத்து ரூ. 25 ஆக அறிவித்துள்ளது. மேலும், வாடகைக்கான வைப்பபத் தொகையையும் ஆறு மாதமாக குறைத்துள்ளது. ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சம் 5,000 சதுர அடி தான் என்ற வரையறையையும் தளர்த்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பூங்கா 56 ஏக்கரில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications