ஈபிள் கோபுரத்துக்கு குண்டு மிரட்டல்-ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

Eiffel Tower
பாரீஸ்: பாரீசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலையடுத்து அதிலிருந்த 2,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு இந்தக் கோபுரத்திலும் அதை ஒட்டியுள்ள பூங்கா மற்றும் பொழுது போக்கு மையத்தில் சுமார் 25,000 பேர் இருந்த நிலையில் கோபுரத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து கோபுரத்தில் இருந்த 2,000 பேரையும் சுற்றுப் பகுதியில் இருந்த 23,000 பேரையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு தீவிர சோதனை நடத்தினர்.

ஈபிள் கோபுரம் முழுவதும் இரவு முழுவதும் சோதனை நடந்தது. ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.

அதே போல நாட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தின் அருகே உள்ள புனித மைக்கேல் ரயில் நிலையத்திற்கும் குண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டு சோதனை நடந்தது. அங்கும் குண்டு ஏதும் சிக்கவில்லை. இந்த ரயில் நிலையத்தில் 1995ம் ஆண்டு அல்ஜீரிய தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிகுண்டு மிரட்டல்களால் பாரீஸ் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. நகரம் முழுவதுமே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+