For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெக்சிகோவில் அருகே பசிபிக் தீவில் பயங்கர நிலநடுக்கம்

By Chakra
Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் இஸ்லாஸ் மரியாஸ் தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் நயாரித் என்ற இடத்துக்கு 100 கி.மீ. தூரத்தில் பசிபிக் கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோளில் 5.9 புள்ளிகளாகப் பதிவானது.

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவின் இஸ்லாஸ் மரியாஸ் தீவில பொது மக்கள் யாரும் வசிக்கவில்லை. இந்தத் தீவில் நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலை தான் உள்ளது. இதில் 1,200 கைதிகள் உள்ளனர். நிலநடுக்கத்தால் சிறைக் கட்டடம் பயங்கரமாகக் குலுங்கியதால் கைதிகள் அலறினர்.

கடலுக்குள் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.

கடந்த 1995ம் ஆண்டு மெக்சிகோ அருகே பசிபி்க் கடலில் ஏற்பட்ட நிலநடுகத்தால் உருவான சுனாமிக்கு 100 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் இறந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X