கடையநல்லூர் அருகே பஸ் மரத்தில் மோதி 21 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே தனியார் பேருந்து மீது அரசுப் பேருந்து மோதி 21 பேர் காயமடைந்தனர்.

கடையநல்லூர் அருகே உள்ள முத்துசாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று காலை தனியார் பேருந்து நின்றது. அதில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த அரசுப் பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதியது. இதனால் தனியார் பேருந்து நகர்ந்து அருகில் இருந்த பனை மரத்தில் மோதியது.

இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் ராமசாமி, அரசுப் பேருந்து ஓட்டுநர் கோபால்சாமி, கண்டக்டர் சீனிவாசன் ஆகியோர் காயமடந்தனர். இவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் தென்காசி மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சொக்கம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+