ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள்: மீனாட்சி அம்மனுக்கு பூஜை
மதுரை: ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் கூறியதாவது,
தமிழகத்தில் 240 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரையும் அர்ச்சகர்களாக்கக் கூடாது. மற்ற சாதியைச் சேர்ந்தவரகளால் அர்ச்சகர் பணியை சிற்ப்பாகச் செய்யமுடியாது என்று மதுரை பட்டர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இதற்குப் பின்னர் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போகிறது. அதனால் தான் அர்ச்சகர் பயிற்சி முடித்தும் பணிபுரிய முடியாமல் தவிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அர்ச்சகராக முழுத் தகுதியுள்ள நாங்கள் மதுரையில் ஆலய நூழைவுப் போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும், மதுரை மீனாட்சி அம்மனுக்கும் பூஜைகள் நடத்தவிருக்கிறோம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications