வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கான இலவச செல்போன் திட்டம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கான இலவச செல்போன் வழங்கும் திட்டம் இன்று திருப்பூரில் தொடங்கி வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பாலக்கரை அவினாசியில் வறுமைக் கேர்ட்டிற்கு கீழ் வாழம் ஏழை மக்களுக்கு, இலவச செல்போன்கள் வழங்கும் திட்டத்தின் தொடங்க விழா நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா பயனாளிகளுக்கு வழங்கினார்.
அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட 36 கிராமங்களைச் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு இலவச செல்போன்களை ராசா வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தொலைபேசி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 கோடியாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications