சட்ட மேலவைத் தேர்தல்-மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழகத்தில் சட்ட மேலவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக மீண்டும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்களை அழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.
தமிழக சட்ட மேலவைத் தொகுதிகளை வரையறை செய்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் இதுதொடர்பாக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது.
அப்போது தேர்தலை அவசரப்பட்டு நடத்தாமல் நிதானித்து தெளிவான முறையில் நடத்த வேண்டும் என அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரின. திமுகவும், காங்கிரஸும் உடனடியாக தேர்தலை நடத்த வலியுறுத்தின.
இந்த நிலையிலா் தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தை திங்கள்கிழமையன்று கூட்டியுள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்.
இக்கூட்டத்தில் தொகுதிகள் வரையறை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications