சென்னையில் 3 ஆண் நர்ஸ்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு சென்னையில் 3 நர்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தலைநகர் சென்னை, கோவை, திருச்சி, சேலம், வேலூர், கன்னியாகுமரி, திருவள்ளூர் என பல மாவட்டங்களிலும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரி வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ரூ. 200க்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் ஏழை எளியோருக்கு இலவசமாக தடுப்பூசி போடவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

பன்றிக் காய்ச்சல் சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபடும் 19 ஆயிரத்து 930 பொது சுகாதாரதுறைபணியாளர்கள், 18 ஆயிரத்து 854 மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் ஆண் நர்சுகளாக பணி புரியும் 5 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ரத்தப் பரிசோதனையில் அவர்களில் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது தெரிய வந்தது.

இவர்களில் முனிரத்தினம் என்பவர் தர்மபுரியைச் சேர்ந்தவர். ஜான்கனோலி ரத்தினம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். சுஜி சங்கீத்ராஜா வேலூரைச் சேர்ந்தவர். இவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+