இலவச பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி: முதல்வருக்கு சரத்குமார் நன்றி
நெல்லை: வருமை கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட உத்தரவிட்டிருப்பதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என்று முதலில் வலியுறுத்தினேன். அதன்பேரில் முதல்வர் கருணாநிதி சலுகை கட்டணத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி போடப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகளை இலவசமாகப் போட வேண்டும் எனக கோரிக்கை விடுத்தேன்.
தற்போது அதை ஏற்று முதல்வர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மக்களுக்கு பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications