என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக்-இன்று இரவு தொடங்குகிறது
Subscribe to Oneindia Tamil

சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர் ஒப்பந்த தொழிலாளர்கள். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று மாலை நெய்வேலி பஜார் காமராஜர் சிலை அருகே இதுதொடர்பான கூட்டம் நடக்கிறது. பின்னர் நள்ளிரவு முதல் ஸ்டிரைக் தொடங்குகிறது.
இந்த ஸ்டிரைக்கால் நிலக்கரி வெட்டி எடுப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications