இலங்கையில் 200 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு தீவிர பயிற்சி?
கொழும்பு: இந்தியாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 200 பேருக்கு இலங்கையில் தீவிர ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் தனது பயிற்சித் தளங்களை அமைத்து செயல்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பாவுக்கு தற்போது புதிய வாசஸ்தலமாக இலங்கை மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் வனப் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாண பகுதிகளில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சிப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா மறுத்திருந்தார்.
ஆனால் தற்போது 200 தீவிரவாதிகள் இலங்கையில் தீவிர ஆயுதப் பயிற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உளவுத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன. இந்தியாவுக்குள் ஊடுறுவ, இலங்கை நல்ல வாய்ப்பாகவும், எளிய வழியாகவும் இருப்பதாக தீவிரவாதிகள் கருதுவதால் இலங்கையை தங்களது புதிய களமாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புனேவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கிய இருவர், தாங்கள் கொழும்பில் வைத்து பயிற்சி பெற்றதாக கூறியிருந்தனர். இதை கோத்தபயா மறுத்திருந்தார். ஆனால் தற்போது 200 பேர் வரை பயிற்சி பெறுவதாக வெளியாகியுள்ள செய்தி இந்தியத் தரப்பில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications