தேனி அருகே ஜீப் மீது பஸ் மோதி 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஜீப் மீது தனியார் பேருந்து மோதியதில் ஜீப்பில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர்.
சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி, பள்ளிகோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை 6 மணிக்கு ஜீப் மூலம் கேரளா சென்றனர். பின்னர் மாலையில் கிராமத்துக்குத் திரும்பினர். ஜீப்பை தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (41) என்பவர் ஓட்டினார்.
அந்த ஜீப் தென்னஞ்சோலை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே தேனியிலிருந்து கம்பம் நோக்கி வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில், சுரேஷ், சீனியம்மாள் (65), நிலவு (46), சீதை (45), பொம்மி (45) மற்றும் ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications