ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் மின் உற்பத்தி பாதிக்காது-என்.எல்.சி்.
நெய்வேலி : ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மின் உற்பத்தி பாதிக்காது என்று என்.எல்.சி. நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து என்.எல்.சி. நிறுவனத்தின் நிர்வாகத் துறையின் கூடுதல் பொறுப்பாளரும், நிதித்துறை இயக்குநருமான ஆர்.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம ஊதியம் வழங்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பல்வேறு வசதி வாய்ப்புகளை செய்து கொடுப்பதோடு, ஒவ்வொரு ஒப்பந்தத் தொழிலாளிக்கும் அவருக்கு அளிக்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும் கூடுதலாக நாள் ஒன்றுக்கு ரூ. 270 முதல் ரூ. 300 வரை நிர்வாகம் செலவு செய்து வருகிறது.
நாட்டில் உள்ள மற்ற பொதுத்துறை நிறுவனங்களை விட என்.எல்.சி.-யில்தான் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.
16-06-08 அன்று புது டெல்லியில் ஏற்பட்ட உடன்படிக்கையை அமல்படுத்த நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி அன்று மத்திய அரசின் உதவித் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில், நிர்வாகத்தின் நிலையை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்தது.
ஆனால் அதற்கு மாறாக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்கள் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்த்தி்ல் ஈடுபட்டு வருகின்றனர். இது ஜனநாயக விரோதச் செயல்.
ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மின்சார உற்பத்திக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications