தர்மபுரி பஸ் எரிப்பு-3 கொலையாளிகளுக்கும் கருணை காட்ட கோரி அதிமுக மனு!
இதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வக்கீல்கள் அணிச் செயலாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய குழு வேலூர் சிறைக்குச் சென்று 3 பேரிடமும் கையெழுத்து வாங்கினர்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 அதிமுகவினவருக்கும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை அக்டோபர் 8ம் தேதி தூக்கிலிட சேலம் முதலாவது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை, சேலம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராகவன் செவ்வாய்க்கிழமை வேலூர் சிறைக்கு கடிதம் அனுப்பினார்.
இந்தக் கடிதம் புதன்கிழமை காலையில் வேலூர் மத்திய சிறைக்கு வந்து சேர்ந்தது. இதை சிறைக் கண்காணிப்பாளர் சேகர் பெற்றுக் கொண்டார். இதை தூக்குத் தண்டனை கைதிகள் மூவருக்கும் அவர் அளித்தார்.
அதில், "வரும் அக்டோபர் 8ம் தேதி காலை 6 மணிக்கு மூவரையும் சாகும் வரை தூக்கிலிட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வேலூர் மத்திய சிறையில் தூக்கு கடைசியாக எப்போது நிறைவேற்றப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், தூக்குப்போடும் இயந்திரம் மட்டும் தொடர்ந்து தயார் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று சேகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறங்கியுள்ளார். நேற்று வேலூர் மத்திய சிறைக்குச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மூன்று பேரையும் சந்தித்துப் பேசினர்.
பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கருணை மனுவில் மூன்று பேரிடமும் கையெழுத்து பெற்றனர். ஆனால், இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் ஏதும் கூற மறுத்தனர்.
இந்த மனுவுடன் டெல்லி சென்று நேரடியாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் அதிமுக எம்.பிக்கள் கருணை மனுவை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே, சிறைத்துறை மூலமாகவும் 3 அதிமுகவினரும் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கருணை மனு சமர்ப்பிப்பதைத் தொடர்ந்து மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் இந்த மனுக்கள் மீது முடிவெடுக்கும் வரை அவர்களுடைய தண்டனை நிறைவேற்றப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்













Click it and Unblock the Notifications