நியூசிலாந்து வீரர்களுக்கான காமன்வெல்த் கிராம தங்குமிடத்தை சுத்தம் செய்யும் நியூசி குழு.
டெல்லி: காமன்வெல்த் போட்டி கிராமத்தின் சுத்தம், சுகாதாரம் குறித்து அதிருப்தி அடைந்துள்ள நியூசிலாந்து, தங்கள் நாட்டு வீரர்களும், அதிகாரிகளும் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை தாங்களே சுத்தம் செய்து கொள்ள ஒரு குழுவை அனுப்பி சுத்தப்படுத்தி வருகிறது.
அந்த குழு சுத்தம் செய்வதற்குத் தேவையான உபகரனங்களுடன் வந்திறங்கி துப்புறவுப் பணியில் இறங்கியுள்ளது.
முதலில் நியூசிலாந்து நாட்டவர்களுக்கு கேம்ஸ் வில்லேஜில், டவர் எண் 31 என்ற குடியிருப்பபுப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது, தற்போது டவர் 8, 9 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள், வீரர்கள் உள்பட 500 பேர் தங்கவிருக்கின்றனர்.
நியூசிலாந்து அணியின் சுத்திகரிப்பு வேலையைப் பார்த்து திருப்தி அடைந்திருக்கும் நிர்வாகக் குழு அவர்களை விட்டு மற்ற டவர்களையும் சுத்தம் செய்யும்படி கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
காமன்வெல்த் போட்டிகள் அமைப்பின் தலைவர் மைக் ஹூப்பர் சமீபத்தில் கேம்ஸ் வில்லேஜை சுற்றிப் பார்த்தபோது, மகா அழுக்காகவும், தாங்கமுடியாத அசுத்தமாகவும் இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications