Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கு எத்தனை பதக்கம் கிடைக்கும் என்பதில்தான் எனக்கு ஆர்வம்-ஆனந்த்

Subscribe to Oneindia Tamil

Anand with wife Aruna
டெல்லி: காமன்வெல்த் போட்டி குறித்த குழப்பங்கள் குறித்து நான் தலையிட விரும்பவில்லை. இந்தியாவுக்கு இதில் எத்தனை பதக்கம் கிடைக்கும் என்பதுதான் எனது முதல் கவலையாக உள்ளது என்றுகூறியுள்ளார் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்.

காமன்வெல்த் போட்டிகள் அடுத்த மாதம் 3-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. ஆனால் போட்டிகளுக்கு முன்பே ஏகப்பட்ட சர்ச்சைகள். இதுகுறித்து ஆனந்த்திடம் கேட்டபோது,

நான் இந்த குழப்பங்களில் தலையிட விரும்பவில்லை. இது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. தற்போது நாம் நிறைய பதக்கங்கள் வாங்குவோம் என்று நம்புகிறேன். நான் பதக்கப் பட்டியலில் தான் கவனம் செலுத்துகிறேன்.

நான் இந்திய வீரர்கள் விளையாடுவதை உன்னிப்பாகப் பார்ப்பேன். இதில் தடகள வீரர்கள் பதக்கங்கள் வாங்கினால் அது அவர்களுக்கு மட்டுமின்றி விளையாட்டுத் துறைக்கே ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+