திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அயோத்தி நில விவகாரத்தில் நேற்று தீர்ப்பு வெளியாகும் எனறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில், அருணாசலேஸ்வரர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம், திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவோம், முடிந்தால் கைது செய்து பாருங்கள், இப்படிக்கு தீவிரவாத கும்பல் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் தங்கராஜ் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து கோவில் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இது குறிக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications