ரூ. 2727 கோடி வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

இதில் அதிக அளவிலான முதலீட்டை சிங்கப்பூரைச் சேர்ந்த மின்சார நிறுவனமாஐன ஆசியன் ஜென்கோ பிரைவேட் லிமிட்டெட் மற்றும் வீட்டு வசதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு (எச்டிஐஎல்) ஆகிய இரண்டு நிறுவனங்களும் பெரிய அளவிலான முதலீடைச் செய்கிறது.
வெளிநாட்டு நேரடி முதலீடு வளர்ச்சி வாரியம் அளித்த பரிந்துரைகளின் பேரில் இந்த 24 திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆசியன் ஜென்கோ நிறுவனம் முதலீட்டு நிறுவனம் ஒன்றை ரூ. 1100 கோடி மதிப்பீட்டில் இந்தியாவில் தொடங்குகிறது. எச்டிஐஎல் நிறுவனம் ரூ. 747.50 கோடி மதிப்பிலான ரியல் எஸ்டேட் தொழிலை இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளது.
இத்திட்டத்தின்படி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை எச்டிஐஎல் மேற்கொள்ளவுள்ளது. குடிசை மாற்று திட்டங்கள், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஆகியவற்றையும் இது மேற்கொள்கிறது.












Click it and Unblock the Notifications