கேம்ஸ் வில்லேஜில் தங்காமல் ஹோட்டல்களுக்குப் போகும் இங்கிலாந்து வீரர்கள்
லண்டன்: காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து விளையாட்டு வீரர்கள் இன்று டெல்லி வந்திறங்குகின்றனர். ஆனால் கேம்ஸ் வி்ல்லேஜில் தங்காமல் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
பல்வேறு கேள்விகள், வியாக்கியானங்களுக்குப் பின்னர் ஒரு வழியாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து முடிவு செய்தது. இதையடுத்து நேற்று இரவு ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 22 வீரர்கள் கொண்ட அணி கிளம்பியது. இதில் இங்கிலாந்து ஆண்கள் ஹாக்கி அணியும், லான் பவுலிங் அணியும் அடக்கம்.
இது குறித்து இங்கிலாந்து குழுவின் தலைவர் க்ரெய்க் ஹன்டர் கூறியதாவது,
வீரர்கள் கேம்ஸ் வில்லேஜில் தங்க இன்னும் சில நாட்கள் ஆகும். அங்கு இது வரை சென்றுள்ள சர்வதேச அதிகாரிகள் கேம்ஸ் வில்லேஜ் அழுக்காகவும், தங்க முடியாத நிலையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
எங்கள் வீரர்களை நாங்கள் ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றார்.