6 வது நாளாக என்.எல்.சி தொழிலாளர்கள் வேலை ‌நிறு‌த்த‌‌ம்

Subscribe to Oneindia Tamil

NLC Unit
நெய்வேலி: என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் 6-வது நாளாகத் தொடர்கிறது.

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து சென்னை மண்டலத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில், ஆணையர் ஜகன்நாதராவ் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும், இப்பிரச்னையைத் தீர்க்க 15 நாள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் நிர்வாகத் தரப்பில் கோரியதாக தெரிய வருகின்றது. அதை எழுத்து மூலமாக நிர்வாகம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கேட்டதற்கு நிர்வாகம் மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதை‌‌த் தொட‌‌ர்‌ந்து 6 வது நாளாக இ‌ன்று‌ம் வேலை ‌நிறு‌த்த‌ம் ‌‌தொடர்கின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+