பெண் எஸ்.பி.யை 1.5 கி.மீ இழுத்துச் சென்ற 2 ஏட்டுகள் நீதிமன்றத்தில் சரண்
பரேலி: உ.பி. மாநிலத்தில் பரேலியில் லஞ்சம் வாங்கிய ஏட்டுகளை கையும், களவுமாகப் பிடிக்க வந்த பெண் எஸ்.பியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற 2 ஏட்டுகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மாவட்ட நீதிபதி கலிமுல்லா கான் முன்பு சரணடைந்த ஏட்டுகள் ரவீந்திர யாதவ், மனோஜ் சிங்கை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
செப்டம்பர் 2-ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் போக்குவரத்துறை எஸ்.பி. கல்பனா சக்சேனாவுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டது. மேலும், அவர் கை எலும்பு முறிந்தது.
குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் தர்மேந்திரா என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இன்னொரு ஏட்டு ரவீந்திர சொன்கர் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்.
சக்சேனாவிற்கு காவலர்கள் லஞ்சம் வாங்குவதாக வந்தத் தகவலை அடுத்து அவர்களை பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த 3 ஏட்டுகளை விசாரித்ததில் தாங்கள் லஞ்சமே வாங்கவில்லை என்று மறுத்துள்ளனர். இதையடுத்து அவர் தனது உதவியாளரை விட்டு அந்த 3 பேரின் சட்டைப் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
வலையில் சிக்கிய அவர்கள் சக்சேனாவைத் தாக்கிவிட்டு அந்த இடத்தைவிட்டு ஓட முயன்றனர்.
அவர்கள் தப்பிக்கும் போது சக்சேனா ஒரு காவலரின் சட்டைக் காலரைப் பிடித்துள்ளார். அவர்கள் வண்டியை நிறுத்தாமல் சக்சேனாவை இழுத்துக் கொணடே சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications