144 பேருடன் சென்ற விமானம் மீது பறவை மோதியது-ஆபத்தில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்த விமானம் மீது பறவை மோதியது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
அந்தமானில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அதில், 6 ஊழியர்கள் உள்பட 144 பேர் இருந்தனர். முற்பகல் 11.30 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது பறவை ஒன்று விமானத்தில் மோதியது. உடனே உஷார் அடைந்த பைலட் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.
அதிர்ஷ்டவசமாக விமானத்துக்கு எந்த ஆபத்தும் நேரிடவில்லை. இதனால் 144 பேரும் தப்பினர்.












Click it and Unblock the Notifications