எல்லா தவறுகளுக்கும் நானே பொறுப்பேற்கிறேன்-சுரேஷ் கல்மாடி
டெல்லி: காமன்வெல்த் போட்டி தொடர்பான அனைத்துக் குளறுபடிகளுக்கும் நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறியுள்ளார் போட்டி அமைப்புக் குழுத் தலைவரும், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவருமான சுரேஷ் கல்மாடி.
குழப்பத்திற்கு மேல் குழப்பம் குவிந்தபோதெல்லாம் வாயே திறக்காமல், சப்பைக் கட்டுப் பேச்சை பேசி வந்த சுரேஷ் கல்மாடி, போதும் போதும் என்ற அளவுக்கு நாட்டின் பெயர் கெட்டுக் குட்டிச் சுவராகியுள்ள கடைசி நேரத்தில் அனைத்துத் தவறுகளும் தானே பொறுப்பேற்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதை விட முக்கியமாக தவறுகளுக்கு நாங்கள் மட்டும் காரணம், அரசும் கூட தான் காரணம் என்று மத்திய அரசையும், டெல்லி அரசையும் வம்புக்கு இழுத்துள்ளார். உரிய நேரத்தில் அடிப்படைக் கட்டமைப்புக்குத் தேவையானவற்றை அரசுத் துறைகள் தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுவே குழப்பங்கள் அதிகரிக்கக் காரணம் என்கிறார் கல்மாடி.
இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டியை நடத்துவது மட்டுமே போட்டி அமைப்புக் குழுவின் வேலை. கட்டுமானப் பணியில் நான் ஈடுபடுவில்லை. அது எனது பொறுப்பும் அல்ல. அதைக் கண்காணிப்பது மட்டுமே எனது வேலை. ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில், இந்தக் குழப்பங்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஆனால் போட்டி மைதானங்களை தாமதமாகத்தான் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 2002ல் மான்செஸ்டரில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போதும் ஏகப்பட்ட கோளாறுகள் இருக்கத்தான் செய்தன. இந்திய அணியினரை ஒரு பல்கலைக்கழகத்தில்தான் தங்க வைத்தனர். எனவே டெல்லி காமன்வெல்த் போட்டியை ஒட்டுமொத்தமாக குறை கூறுவது சரியல்ல.
கேம்ஸ் வில்லேஜ் சிறப்பாக உள்ளது. உலகத் தரத்தில் அமைந்துள்ளன. மெல்போர்னில் இருக்கும் அனைத்து வசதிகளும் இங்கும் உள்ளன என்றார் கல்மாடி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications