வருண் காந்திக்கு கல்யாணம்: சோனியாவை அழைப்பேன்-மேனகா தகவல்
பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவராக முன்னிறுத்தப்படும் வருண் காந்திக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யாமினி ராய்க்கும், வருணுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்த ஆண்டே திருமணம் நடைபெறும் என மேனகா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், யாமினிக்கும், வருணுக்கும் இந்த ஆண்டே திருமணம் நடைபெறும். இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட, திருமணத்திற்கு அழைக்கவுள்ளேன் என்ரார் மேனகா.
வருண் காந்தி தனது தாயார் நெடுங்காலமாக வென்று வந்த பிலிபிட் தொகுதியிலிருந்து எம்.பியானவர். மகனுக்காக வேறு தொகுதிக்கு மாறி வெற்றி பெற்றார் மேனகா.
கடந்த 1997ம் ஆண்டு பிரியங்காவுக்கு திருமணம் நடந்தபோது வருண் காந்தி கல்யாணத்திற்குப் போயிருந்தார். அப்போது அவர் சிறு பையன். இருப்பினும் மேனகா கல்யாணத்திற்குப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி உயிருடன் இருந்தபோதிலிருந்தே மேனகாவுக்கும், இந்திரா குடும்பத்திற்கும் இடையே நல்லுறவு இல்லை. இது இந்திராவின் மறைவுக்குப் பிறகு மேலும் வலுத்தது. சோனியாவும், மேனகாவும் சுத்தமாக பேசிக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,