3 மாதங்களுக்குப் பின் காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
ஸ்ரீநகர்: வன்முறைக் களமாக மாறியுள்ள காஷ்மீரில் இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் வருகைப் பதிவு மிகவும் குறைவாகவே இருந்தது.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரம் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
நேற்று காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்ப்பட்டது. இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிகள் இன்றுதிறக்கப்பட்டன. ஆனால் வருகைப் பதிவு மிக மிக குறைவாகவே இருந்தது.
நேற்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும், ஸ்ரீநகரின் பல பகுதிகள், பாராமுல்லா, குப்வாரா, சோபோர் ஆகிய பகுதிகளில் இன்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதேசமயம், பள்ளி மாணவர்களை பாதுகாப்பான முறையில் பள்ளிகளுக்கு அழைத்து வர மாநில அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதேபோல கல்லூரிகளும் கூட இன்று காலை திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் கூட வருகைப் பதிவு குறைவாகவே இருந்தது.
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம், இதை சீர்குலைக்க யாரும் முயல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications