3 மாதங்களுக்குப் பின் காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
ஸ்ரீநகர்: வன்முறைக் களமாக மாறியுள்ள காஷ்மீரில் இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் வருகைப் பதிவு மிகவும் குறைவாகவே இருந்தது.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரம் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
நேற்று காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்ப்பட்டது. இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிகள் இன்றுதிறக்கப்பட்டன. ஆனால் வருகைப் பதிவு மிக மிக குறைவாகவே இருந்தது.
நேற்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும், ஸ்ரீநகரின் பல பகுதிகள், பாராமுல்லா, குப்வாரா, சோபோர் ஆகிய பகுதிகளில் இன்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதேசமயம், பள்ளி மாணவர்களை பாதுகாப்பான முறையில் பள்ளிகளுக்கு அழைத்து வர மாநில அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதேபோல கல்லூரிகளும் கூட இன்று காலை திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் கூட வருகைப் பதிவு குறைவாகவே இருந்தது.
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம், இதை சீர்குலைக்க யாரும் முயல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications