பெங்களூர் சிறையில் மதானியை கண்காணிக்க கேமரா: மனைவி தகவல்
திருவனந்தபுரம்: பெங்களூர் சிறையில் தனது கணவர் அப்துல் நாசர் மதானியைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக மதானியின் மனைவி சூபியா கூறியுள்ளார்.
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானியை கடந்த மாதம் கர்நாடக போலீசார் கைது செய்தனர். அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழக பஸ் எரிப்பு வழக்கில் 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அவரது மனைவி சூபியா தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில் மதானியை சந்திக்க அனுமதி கேட்டு சூபியா கொச்சி நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீனை 2 வாரம் தளர்த்தி உத்தரவிட்டது. இதையடுத்து சூபியா, அவரது மகன் உமர் முக்தாருடன் பெங்களூர் சென்று மதானியை சந்தித்தார்.
பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சூபியா நிருபர்களிடம் கூறுகையில்,
சிறையில் மதானியின் ஒவ்வொரு அங்குல அசைவையும் கண்காணிக்க கேமரா வைத்துள்ளனர். பாத்ரூமில் கூட கேமரா பொருத்தியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications