சீனாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் 'வெப் சூப்பர் பக்': நிபுணர்கள் எச்சரிக்கை
பீஜிங்: புதிய சைபர் ஆயுதம் என்று கூறப்படும் மிகவும் சிக்கலான தீய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அல்லது மால்வேர் சீனாவின் பிரதான துறைகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஊடுருவப் பார்க்கிறது. இது சீனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்டக்ஸ்நட் என்று அழைக்கப்படும் இந்த சூப்பர் பக், முதன் முதலில் கடந்த ஜுன் மாத மத்தியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது சீமன்ஸ் நிறுவனத்தின் கண்காணிப்பு கட்டுப்பாடு மற்றும் தகவல் அமைப்பை அழிக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது. சீமன்ஸ் நிறுவனக் கம்ப்யூட்டர்கள் தான் சீனாவின் போக்குவரத்து விளக்குகள், அணுமின் நிலையம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பீஜிங்கில் உள்ள ரைசிங் இன்டர்நேஷனல் சாப்ட்வேர் கம்பெனியின் பொறியாளர் கூறியதாவது,
இது தகவல்களைத் திருடுவதற்காக வடிவமைக்கப்படவில்லை. மாறாக, அதைச் செய்யாமலேயே, அதைக் கொண்டு இயங்கும் நிலையங்களையும், தொழிற்சாலை அமைப்பையும் முற்றிலும் சீர்குலைத்து அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் முக்கியமான துறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications